News February 17, 2025
சீல் இல்லாத சாராய பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் கொந்தமூர் சர்வீஸ் சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி, அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில், 20 சீல் வைக்காத சாராய பாக்கெட்டுகள், அரை லிட்டர் சீல் இல்லாத சாராய பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இச்சம்பவத்தில் அர்ஜுனன் மற்றும் ஆனந்த், வின்சென்ட் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 22, 2025
விழுப்புரம்: ஓடும் பேருந்தில் 6 பவுன் நகை திருட்டு!

விழுப்புரம் பூந்தோட்டம் காமதேனு நகரைச் சோ்ந்தவா் ரா.பாலன் (44). இவரது தந்தை ராமலிங்கம், தாய் நாகா. இவா்கள் மூவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளனா். முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது, நாகா அணிந்திருந்த 6 பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்துள்ளது. புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் செய்து திருடிய நபரை தேடி வருகின்றனர்.
News November 22, 2025
விழுப்புரம்: ஓடும் பேருந்தில் 6 பவுன் நகை திருட்டு!

விழுப்புரம் பூந்தோட்டம் காமதேனு நகரைச் சோ்ந்தவா் ரா.பாலன் (44). இவரது தந்தை ராமலிங்கம், தாய் நாகா. இவா்கள் மூவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளனா். முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது, நாகா அணிந்திருந்த 6 பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்துள்ளது. புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் செய்து திருடிய நபரை தேடி வருகின்றனர்.
News November 22, 2025
விழுப்புரம்: திமுக கவுன்சிலர் மீது பாலியல் புகார்!

விழுப்புரம்: திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர் திருவக்கரை பாஸ்கரன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களாக, தன்னை மிரட்டி, தனிமையில் இருந்து, அதை வீடியோ எடுத்ததாக கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது பாஸ்கரனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.


