News February 17, 2025
சீல் இல்லாத சாராய பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் கொந்தமூர் சர்வீஸ் சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி, அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில், 20 சீல் வைக்காத சாராய பாக்கெட்டுகள், அரை லிட்டர் சீல் இல்லாத சாராய பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இச்சம்பவத்தில் அர்ஜுனன் மற்றும் ஆனந்த், வின்சென்ட் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 20, 2025
விழுப்புரம்: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News November 20, 2025
விழுப்புரம் இளைஞர்களே நாளை மறந்துடாதீங்க!

விழுப்புரம்: வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (நவ.21) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில், 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில், 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க!
News November 20, 2025
விழுப்புரம்: ரயில்வேயில் 3,000 காலி இடங்கள்- APPLY HERE!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் 3,058 NTPC காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 19,000-21,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விருப்பமுள்ளவர்கள் நவ.27-க்குள் இந்த <


