News June 26, 2024

சீர்மரபினர் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதற்கு நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாரியத்தில், பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு, உதவித்தொகை மற்றும் சலுகை வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 22, 2025

சமத்துவ கிறிஸ்மஸ் தின விழா; விஜய் பங்கேற்பு

image

மாமல்லபுரம் அருகேயுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று காலை10:30 மணியளவில் மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்மஸ் தின விழா நடைபெற உள்ளது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 21, 2025

செங்கல்பட்டு இன்று இரவு பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (டிசம்பர்- 21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 21, 2025

செங்கல்பட்டு: உள்ளூரில் அரசு வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க

image

செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் பார்மசிஸ்ட், யோகா, டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், காலியாக உள்ள 88 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் டிச.27க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!