News June 26, 2024
சீர்மரபினர் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதற்கு நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாரியத்தில், பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு, உதவித்தொகை மற்றும் சலுகை வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 22, 2026
திக்குமுக்காடும் திருப்போரூர் மக்கள்!

திருப்போரூர் பஸ் நிலையத்தில் தினம்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. மேலும், திருப்போரூர் மற்றும் சுற்றியுள்ள ஆயிரகணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பஸ் நிலையத்தில் ஏராளமான மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மூட்டைமுடிச்சுகளுடன் ஆபாசமாக பேசுவது, பெண் பயணிகளிடம் திடீரென ஓடுவது, அமர்ந்த இடத்தில் சிறுநீர், மலம் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
News February 22, 2026
ஸ்தம்பித்த செங்கல்பட்டு!

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே நேற்று கனரக லாரி ஒன்று கார் மீது மோதியதில் கட்டுப்பட்டை இழந்த கார் முன்னாள் சென்ற மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர்கள் இருவர் லேசான காயமடைந்தனர். விபத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 22, 2026
செங்கல்பட்டில் உடல் தூக்கிவீசப்பட்டு பலி

கும்பகோணத்தை சேர்ந்தவர் அனுசுயா (வயது 23). இவர் ராஜதுரை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும் 2 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர். அனுசுயா கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கணவன், மனைவிக்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், செங்கல்பட்டு- கடற்கரை செல்லும் ரயில் முன் பாய்ந்து உடல் தூக்கிவீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.


