News June 26, 2024

சீர்மரபினர் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதற்கு நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாரியத்தில், பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு, உதவித்தொகை மற்றும் சலுகை வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 18, 2025

செங்கல்பட்டில் இன்று மழை வெளுக்கும்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடலோர பகுதிகளில் மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளத்தக்க வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க.

News September 18, 2025

செங்கல்பட்டு: கோழி திருடியதை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு

image

சூணாம்பேடு பகுதியைச் சேர்ந்த நாகப்பன்(46) கால்நடை மருத்துவமனை வளாகத்தில் வசித்து வருகிறார். அதே வளாகத்தில் வசித்து வரும் விஜய்(25) என்ற நரிக்குறவர், சூணாம்பேடு காலனி பகுதியில் இருந்து கோழியை திருடி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது விஜய், அருகே இருந்த அரிவாளால் நாகப்பனின் தலையில் வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த நாகப்பன், செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News September 18, 2025

செங்கல்பட்டு: 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் விரைவில்.!

image

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் சுமார் 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்க இடம் தேர்வாகியுள்ளது. இந்நகரில் வீட்டு வசதி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, தகவல் தொழில்நுட்ப பூங்கா, வேலைவாய்ப்புகள், வணிக வளாகம், வங்கிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை சர்வதேச தரத்தில் உருவாக்கப்படும். இந்நகரத்துடன் சென்னை போன்ற பெரு நகரங்களை இணைக்கும் வகையில் சாலை, ரயில் பாதை உள்ளிட்டவை உருவாக்கப்பட உள்ளது. SHARE

error: Content is protected !!