News May 7, 2025
சீர்காழி: மனைவியை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை, சீர்காழியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரை அவரது கணவர் பூராசாமி குடும்ப தகராறு காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்தார். கொலை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளி பூராசாமிக்கு ஐந்தாயிரம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்துள்ளார். இதை தொடர்ந்து பூராசாமி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News December 6, 2025
மயிலாடுதுறையில் தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 13-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் முதன்மை மாவட்ட நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது. சமரசத்துக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய சிவில் வழக்குகள் மோட்டார் வாகன விபத்து உள்ளிட்ட வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் பேசி சமரசம் செய்து கொள்ளலாம் என சட்டப்பணி குழு தலைவர் நீதிபதி சுதா தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
மயிலாடுதுறை: பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து

கொள்ளிடம் அருகே ஆனந்த கூத்தன் பகுதியில் பைபாஸ் சாலையில், சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற கார், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது, காரின் பின்னால் வந்த மற்றொரு கார் மோதியதில், முன் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 6, 2025
மயிலாடுதுறை: பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து

கொள்ளிடம் அருகே ஆனந்த கூத்தன் பகுதியில் பைபாஸ் சாலையில், சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற கார், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது, காரின் பின்னால் வந்த மற்றொரு கார் மோதியதில், முன் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


