News January 2, 2025
சீர்காழி பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

வைத்தீஸ்வரன் கோயில், ஆச்சாள்புரம், அரசூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே திருக்கோலக்கா, கோயில்பத்து, கொள்ளிடம், முக்கூட்டு, இரணியன் நகர், விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, மாதானம், அரசாளமங்கலம், உமையாள்பதி, நல்லநாயகபுரம், வேம்படி, திருமுல்லைவாசல், காப்பியக்குடி, அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை (ஜன. 4) காலை 9 மணி முதல் 5 மணிவரை மின்தடை செய்யப்படவுள்ளது
Similar News
News August 11, 2025
மயிலாடுதுறையில் பலரும் அறிந்திடாத கடற்கரை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களுள் திருமுல்லைவாசலில் உள்ள கூழையார் கடற்கரை ஒன்றாகும். இங்கு நதியும், கடலும் ஒன்றாக இருப்பது போல் காட்சியளிப்பதால் பார்பதற்கு மிக அழகானதாக தோன்றுகின்றது. பலரும் அறிந்திடாத ஈந்த கடற்கரையில் நிலவும் அமைதியான சூழலுக்காகவே இக்கடற்கரையை பற்றி அறிந்தவர்கள் அடிக்கடி வருகின்றனர். அனைவருக்கும் ஷேர் செய்து நம்ம ஊரு கடற்கரையை தெரியப்படுத்துங்கள்
News August 11, 2025
மயிலாடுதுறை: நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்காக நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான கொள்குறி வகையிலான தேர்வு வருகிற 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏவிசி தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ஏவிசி இன்ஜினியரிங் கல்லூரி ஆகிய இரண்டு தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த தேர்வினை 843 பேர் எழுத உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News August 10, 2025
மயிலாடுதுறையில் மழை வெள்ள பாதிப்புக்கு, இதை தெரிஞ்சிக்கோங்க!

மயிலாடுதுறையில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.