News October 23, 2024

சீர்காழி சிறுவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

image

சீர்காழி அடுத்த காரைமேடு கிராமத்தில் மாவீரன் (9) சக்தி(9) ஆகிய இரண்டு சிறுவர்களும் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சுக்கான் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனிடையே இன்று உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 10, 2025

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 13 பேர் கைது

image

சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தில் இருந்த ராமாயன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன், சிவதாஸ், கக்ஷ உள்ளிட்ட 14 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தரங்கம்பாடி கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் கடலில் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை நாள் 14 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News November 10, 2025

மயிலாடுதுறை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

மயிலாடுதுறை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கே க்ளிக் <<>>செய்து, உங்கள் சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பிறகு உங்க வீட்டு ‘கரண்ட் பில்’ தகவல் உங்க போனுக்கே வந்துடும். அதுபோல உங்கள் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 10, 2025

மயிலாடுதுறை: மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்

image

மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் நேற்று சட்டவிரோத குட்கா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை மாப்படுகை பண்ணையார் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (42) என்பவர் விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சுமார் 210 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!