News April 14, 2024
சீமான் தீவிர பிரச்சாரம்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை, துறையூர், நம்பர்1 டோல்கேட் ஆகிய பகுதிகளில் (மைக்) ஒலிவாங்கி சின்னத்திற்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் கட்சியின் பெரம்பலூர் நிர்வாகிகள் தொண்டர்களுடன் கலந்து கொண்டனர்.
Similar News
News November 16, 2025
பெரம்பலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 16, 2025
பெரம்பலூர்: ஆசிரியர் தகுதி தேர்வில் 181 ஆப்சென்ட்!

பெரம்பலூரில் அரசுப் பள்ளிகள் உட்பட நான்கு மையங்களில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இன்று நடைபெற்றது. மொத்தம் 1238 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1057 பேர் தேர்வில் கலந்துகொண்டனர். 181 பேர் தேர்வு எழுத வரவில்லை. முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்தத் தேர்வுப் பணியில், மாவட்டக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பலர் ஈடுபட்டிருந்தனர்.
News November 16, 2025
பெரம்பலூர்: பட்டதாரி இளைஞர் தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபி (32), எம்.பி.ஏ பட்டதாரியான இவர் குடிமைப் பணிக்கான தேர்வு எழுதியுள்ளார். இந்த போட்டித் தேர்வில் அவர் தேர்ச்சி பெறாததல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


