News August 14, 2024
சீமான், சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர்களுக்கு தூண்டுதலாக இருந்ததாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் பதிவிட்ட 17 பேர் மீது திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Similar News
News December 15, 2025
திருச்சி: நிவாரண உதவிகள் பெற அறிவிப்பு

வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் செய்திக்குறிப்பில், நிவாரண உதவிகள் பெறுவதற்கு, வேளாண்மை மற்றும் அதன் சகோதர துறைகளின் அனைத்து திட்டங்களை பெறுவதற்கும் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை தேவை. இதற்கு கணினி சிட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல் போன் ஆகியவற்றுடன் முசிறி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், முசிறி வேளாண்மை விரிவாக்க மையம், புலிவலம் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
News December 15, 2025
திருச்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

திருச்சி, கொசவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (35), இவர் கரூர் சென்று திரும்பியுள்ளார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த வயலுக்குள் புகுந்தது. இதில் பயணித்த குடும்பத்தினர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதேபோல் சுள்ளிபாளையத்தை சேர்ந்த ராம சாமி (45) கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலி மீது மோதி நின்றது. இந்த விபத்துகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
News December 15, 2025
வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் – பயணிகள் காயம்

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் விருத்தாச்சலம் கடந்து வந்துகொண்டிருந்தபோது, சிறுவர்கள் ரயிலில் கல்லைக் கொண்டு எறிந்ததில், கண்ணாடி நொறுங்கி பயணிகள் சிலர் காயமடைந்தனர்.
இதனையடுத்து திருச்சி ரயில் நிலையம் வந்தே பாரத் ரயிலில் காயம் அடைந்த பயணிகளிடம், முதுநிலை மருத்துவ கண்காணிப்பாளர் விஜயலட்சுமி நேரில் சந்தித்து அவர்களது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.


