News January 22, 2025

சீமான் கொடும்பாவி எரிக்கப்படும்-மதிமுக எச்சரிக்கை

image

தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான இராம உதயசூரியன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பெரியார் குறித்த விமர்சனங்களை சீமான் நிறுத்தாவிட்டால், மதிமுக தலைமை அனுமதியோடு தென்காசி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் சீமான் கொடும்பாவி எரிக்கும் மாபெரும் போராட்டம் நடைபெறும்” என தெரிவித்தார்

Similar News

News November 14, 2025

புதிதாக பொறுப்பேற்றுள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்!

image

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக கருப்பண்ண ராஜவேல் பொறுப்பேற்பு தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியில் இருந்த எடிசன் மாற்றப்பட்ட நிலையில் ஏற்கனவே செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியில் இருந்த கருப்பண்ண ராஜவேல் நவம்பர்-14ஆம் தேதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மரியாதை நிமித்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News November 14, 2025

தென்காசி: கிராம உதவியாளர் தேர்வு ஒத்திவைப்பு

image

தென்காசி மாவட்ட வருவாய் அலகில் தென்காசி செங்கோட்டை ஆலங்குளம், கடையநல்லூர், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய ஆறு வட்டங்களில் 18-11-2025 அன்று காலை 10.00 மணி முதல் 30 மணி வரை நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து 17.11.2025 முதல் 27.11.2025 வரை நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு ஆகிய அனைத்தும் நிருவாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News November 14, 2025

தென்காசி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தென்காசி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>aservices.t police.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!