News September 13, 2024

சீத்தாராம் யெச்சூரிக்கு மலர் தூவி மரியாதை

image

சீத்தாராம் யெச்சூரி மறைவையொட்டி நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தி.நகரிலுள்ள சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் செப். 13-14 என இரண்டு நாட்கள் சீத்தாராம் யெச்சூரியின் உருவப்படம் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது படத்திற்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Similar News

News November 27, 2025

சென்னைக்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்

image

சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றார். மேலும் வரும் நவ.30 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னைக்கு வரும் நவ.29 அன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 27, 2025

சென்னையை உலுக்கிய சம்பவத்தில் தீர்ப்பு!

image

சென்னை, பரங்கிமலை ரயில்நிலையத்தில் 2022ம் ஆண்டு, சதீஷ் என்பவர் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கு தொடர்பாக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உங்கள் கருத்து என்ன மக்களே கமெண்ட்ல சொல்லுங்க.

News November 27, 2025

சென்னையில் மாடு முட்டி முதியவர் பலி

image

சென்னை, மாதவரம் அடுத்த மாத்துாரில் கடந்த 14ம் தேதி சைக்கிளில் பால் போடும் பணியில் இருந்தார். ஒரு பசு மாடு, குதிரையுடன் உணவிற்காக தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளது. திடீரென மிரண்டு ஓடிய பசு மாடு முதியவர் ஆனந்த் மீது மோதியது. இதில் கீழே விழுந்த முதியவர் பலத்தகாயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு அரசு
ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி முதியவர் நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!