News September 12, 2024

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் கூட்டம்

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்ட குழு சார்பாக, கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு நாளை(செப்.,13) மாலை 5 மணிக்கு பாளை., LIC அலுவலகம் முன்பிருந்து இரங்கல் ஊர்வலம் தொடங்கி லூர்து நாதன் சிலை அருகில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இன்று நெல்லை கட்சி அலுவலகத்தில் அவரது படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினர்.

Similar News

News November 24, 2025

நெல்லையில் மிக கனமழை – கலெக்டரின் அடுத்த அறிவிப்பு

image

நெல்லையில் மிக கனமழை பாதிப்புகள் குறித்து மக்கள் தகவல் தெரிவிக்கும் பொருட்டு பேரிடர்கால அவசர கட்டுப்பாட்டு மையம் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும். கட்டணமில்லா தொலைபேசி எண்:1077, தொலைபேசி எண்:0462-2501070, வணக்கம் நெல்லை 9786566111 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தொடர்புகொண்டு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம். *குழந்தைகளை பாதுகாப்பாக கவனித்துக்கொள்ள அறிவுறுத்தல்* கட்டாயம் ஷேர்

News November 24, 2025

நெல்லை: மழைக்கால ஆபத்தில் உதவும் முக்கிய எண்கள் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்தது தொடர்ந்து இடைவிடாமல் இரண்டு தினங்களாக கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தகவல் வந்த இடங்களில் உடனடியாக மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. மழை காலத்தில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்தது. இதனை எல்லோருக்கும் SHARE செய்யுங்க.

News November 24, 2025

நெல்லை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!