News August 3, 2024

சிவாஜி மன்னர் பாராட்டிய செஞ்சி கோட்டை

image

இன்று சிறு பேரூராட்சியாக இருக்கும் செஞ்சிக்கோட்டை, தற்போதைய ஆந்திராவின் நெல்லூரிலிருந்து தஞ்சை வரை உள்ள நிலப்பகுத்தியின் தலைநகராக இருந்ததாக சொல்லப்படுகிறது.இதனை சுற்றி ராஜகிரி,கிருஷ்ணகிரி,சந்திராயன் துர்கம்,சங்கிலி துர்கம் போன்ற மலை உச்சிகள் கோட்டை காவல் அமைப்புகளாக இருந்தன.மராட்டிய மன்னன் சிவாஜி இந்த கோட்டையை கைப்பற்றிய பிறகு “மராட்டிய மண்ணில் கூட இவ்வளவு பாதுகாப்பான கோட்டை இல்லை” என கூறினார்.

Similar News

News November 23, 2025

விழுப்புரம்: சப்பாத்தி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு!

image

விழுப்புரம்: கரடிக்குப்பத்தை சேர்ந்தவர் தவமணி மகள் பூவரசி (14). நேற்று முன்தினம் இரவு பூவரசி சப்பாத்தி, குருமா சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார். பின்னர் நேற்று அதிகாலை 4 மணியளவில் பூவரசிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவளை பெற்றோர் சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே பூவரசி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 23, 2025

விற்பனைக்காக வலி நிவாரணி (போதை) மாத்திரைகள் வைத்திருந்தவர் கைது

image

தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலமேடு பொன்னியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்ததில் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவர அவரது பெயர் ஜெய்கணேஷ் என தெரிய வந்தது தாலுகா போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து தாலுகா போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

News November 23, 2025

விழுப்புரம்: வேலைக்கு செல்லாத கணவன் – மனைவி தற்கொலை!

image

விழுப்புரம்: கோணை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி புவனேஸ்வரி (32). நாகராஜ் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், விரக்தியில் புவனேஸ்வரி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!