News August 3, 2024
சிவாஜி மன்னர் பாராட்டிய செஞ்சி கோட்டை

இன்று சிறு பேரூராட்சியாக இருக்கும் செஞ்சிக்கோட்டை, தற்போதைய ஆந்திராவின் நெல்லூரிலிருந்து தஞ்சை வரை உள்ள நிலப்பகுத்தியின் தலைநகராக இருந்ததாக சொல்லப்படுகிறது.இதனை சுற்றி ராஜகிரி,கிருஷ்ணகிரி,சந்திராயன் துர்கம்,சங்கிலி துர்கம் போன்ற மலை உச்சிகள் கோட்டை காவல் அமைப்புகளாக இருந்தன.மராட்டிய மன்னன் சிவாஜி இந்த கோட்டையை கைப்பற்றிய பிறகு “மராட்டிய மண்ணில் கூட இவ்வளவு பாதுகாப்பான கோட்டை இல்லை” என கூறினார்.
Similar News
News January 7, 2026
விழுப்புரத்தில் பரபரப்பு – குளத்தில் மிதந்த சடலம்!

விழுப்புரம்: புளிச்சப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் அகமத் கான். இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அகமத் கான் காணாமல் போனார். அதைத்தொடர்ந்து அவரது மகள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வீட்டின் அருகேயுள்ள குளத்தில் சந்தேகத்தின் பேரில் தீயணைப்பு வீரர்கள் தேடினர். அப்போது அகமத் கான் சடலமாக கிடைத்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 7, 2026
விழுப்புரம்: மூதாட்டியை கொடூரமாக தாக்கிய பெண்கள்!

விழுப்புரம்: நாகல்பாக்கத்தைச் சேர்ந்தவர் குப்பு (60). இவர் தனது வீட்டின் அருகே குப்பையை தீ வைத்து எரித்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் முத்துலட்சுமி மற்றும் பரிமளா ஆகிய 2 பேரும் குப்புவை தகாத வார்த்தைகளால் திட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 7, 2026
விழுப்புரம் இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” (ஜன.6) இன்று இரவு 11 மணி முதல் நாளை (ஜன.7) காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்


