News August 3, 2024

சிவாஜி மன்னர் பாராட்டிய செஞ்சி கோட்டை

image

இன்று சிறு பேரூராட்சியாக இருக்கும் செஞ்சிக்கோட்டை, தற்போதைய ஆந்திராவின் நெல்லூரிலிருந்து தஞ்சை வரை உள்ள நிலப்பகுத்தியின் தலைநகராக இருந்ததாக சொல்லப்படுகிறது.இதனை சுற்றி ராஜகிரி,கிருஷ்ணகிரி,சந்திராயன் துர்கம்,சங்கிலி துர்கம் போன்ற மலை உச்சிகள் கோட்டை காவல் அமைப்புகளாக இருந்தன.மராட்டிய மன்னன் சிவாஜி இந்த கோட்டையை கைப்பற்றிய பிறகு “மராட்டிய மண்ணில் கூட இவ்வளவு பாதுகாப்பான கோட்டை இல்லை” என கூறினார்.

Similar News

News January 9, 2026

விழுப்புரம்: விஜய்க்கு பேனர்-தவெக நிர்வாகிக்கு வழக்கு!

image

விழுப்புரம்: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகவுள்ள நிலையில், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் தவெக-வினர் அனுமதியின்றி பேனர் வைத்துள்ளனர். இந்நிலையில், பேனர் வைத்த தவெக பிரமுகர் ஹரி கிருஷ்ணன் மீது நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 9, 2026

விழுப்புரம்: முதியவர் உடல் சிதறி பலி!

image

விழுப்புரம்: கண்டம்பாக்கம் ரயில் நிலையம் அருகே நேற்று மாலை அடையாளம் தெரியாத பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்த தகவல் கிடைத்த உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சென்னை-மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் மோதி பலியானது தெரியவந்தது. பின்னர், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 9, 2026

விழுப்புரம் இரவு ரோந்துப் பணி விவரம்!

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

error: Content is protected !!