News March 6, 2025
சிவன்மலை முருகன் கோயில் சிறப்புகள்

சிவன் திரிபுரத்தை அழிக்க, மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது, அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி, அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு வந்து குடிகொண்டாரம். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும், சிவன்மலை முருகனை வழிபட்டால் கிடைக்கும்.
Similar News
News March 6, 2025
அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறப்புகள்

கோவை அனுவாவியில் மலையின் மையப் பகுதியில், இயற்கை எழிலுடன் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு திருமணத் தடை உள்ளவர்கள் சாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்கிறார்கள்.
News March 6, 2025
திருப்பூர் போலீசின் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (06.03.2025) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், அவினாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம் திருப்பூர் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அவசர அழைப்புக்கு 108 ஐ அழைக்கவும்.
News March 6, 2025
மாவட்ட தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை

திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் தங்கள் பாஸ்போர்ட் தொடர்பான பணிக்காக கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் சென்று வந்தனர். இந்த நிலையில், இதனை தவிர்க்கும் வகையில் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், பாஸ்போர்ட் புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் திருப்பூர் ரயில் நிலையம் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையத்தில் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.