News April 14, 2025
சிவகாசியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

சிவகாசியில் செயல்படும் தனியார் அலுமினிய தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டர் பணிக்கு 25 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 40 வயதிற்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Similar News
News April 18, 2025
சதுரகிரி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் சதுரகிரி சுந்தரமகலிங்கம் கோயில் உள்ளது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி கடந்த 3-ம் தேதி முதல் பக்தர்கள் தினசரி 100 பக்தர்கள் மலையேறி சென்று வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்று விட்டு இறங்கி கொண்டிருந்த போது சின்னபசுக்கிடை – இரட்டைலிங்கம் இடையே யானைகள் கூட்டமாக வந்ததால் பக்தர்கள் அலறி அடித்து ஓடினர்.
News April 18, 2025
விருதுநகரில் 4 பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் – தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டத்தில் 4 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதில் நரிக்குடி மறையூர் சத்திரம், ராஜபாளையம் வட்டம் மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகைஓவியம், புடைப்புச் சிற்பங்கள், மம்சாபுரம் நாயக்கர் கால மண்டபம், பிள்ளையார்நத்தம் மண்டபம் ஆகியவை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட உள்ளது.
News April 18, 2025
விருதுநகரில் SI பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) 1299 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை ஏப்.01 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பயிற்சி வகுப்புகள் ஏப்.23 முதல் ஆரம்பிக்கவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இங்கே <