News April 14, 2025
சிவகங்கை: விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*
Similar News
News November 13, 2025
சிவகங்கை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

சிவகங்கை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News November 13, 2025
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்கு

சிவகங்கை: ரயில் எண் 16321-நாகர்கோயில்- கோவை, 16322 கோவை-நாகர்கோவில். இவ்விரு ரயில்களும் திண்டுக்கல்லில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நவம்-13,15 இரு நாட்கள், வழக்கமான திண்டுக்கல் பாதையில் செல்லாமல், மாற்று பாதையாக மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ஆகிய நிலையங்கள் வழியாக நின்று செல்லும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.
News November 12, 2025
BREAKING: சிவகங்கை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சாலை விபத்தில், மதுரை மாவட்டம் சிட்டப்பட்டியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பூவந்தி – சக்குடி நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சோனேஸ்வரி என்பவருக்கு ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


