News April 14, 2025
சிவகங்கை: விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*
Similar News
News November 21, 2025
சிவகங்கை: 5,810 காலியிடங்கள்., கடைசி வாய்ப்பு! APPLY NOW

சிவகங்கை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன.இதற்கு நவ. 20 கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400. டிகிரி முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 21, 2025
சிவகங்கை: டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

முத்தனேந்தல்–கட்டிக்குளம் சாலையில் இரண்டு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நேரு (67) பலியானார். சுள்ளங்குடி ஊராட்சி செயலாளர் மகேந்திரன் (54) தலையில் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்து குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 21, 2025
மறவமங்கலம் அருகே முதியவர் அரிவாளால் வெட்டி கொலை

மறவமங்கலம் அருகே உள்ள கிழவனூர் பகுதியை சேர்ந்த சற்குணம் (எ) சரவணன் (57) அப்பகுதியில் கடை நடத்தி வரும் நிலையில் இருசக்கர வாகனத்தில் பொருட்கள் வாங்கிக் கொண்டு சந்தக் கடை பகுதியை அடைந்த போது அங்கு வந்த சில நபர்கள் அவரை தடுத்து நிறுத்தி, அரிவாளால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ஹரிதாஸ், மாதவன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


