News September 14, 2024
சிவகங்கை மாவட்டத்தில் பிரசவ கால பெண்கள் இறப்பு விகிதம்

சிவகங்கையில் உள்ள அனைத்து அரசு, தனியார் மகப்பேறு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்த பிரசவத்தில், 2024-2025ம் ஆண்டில் இதுவரை 4,787 குழந்தைகள் பிறந்துள்ளனர். இதில் பிரசவ கால பெண்களின் இறப்பு எண்ணிக்கை 4ஆக உள்ளது. அதே நேரம் 2022-2023ம் ஆண்டில் 16,667 குழந்தைகள் பிறந்ததில், 7 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர். 2023-2024ம் ஆண்டில் 16,210 குழந்தைகள் பிறந்த நிலையில், 8 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர்.
Similar News
News September 16, 2025
சிவகங்கை: EX ராணுவ வீரர் தீக்குளிக்க முயன்ற அதிர்ச்சி..!

தேவகோட்டை அருகே புதூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராமநாதன். இவர் தனது தன்னை சரியாக கவனித்துக் கொள்வதில்லை என்று புகார் கொடுத்தும் அரசு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்து, தீக்குளிக்க முயற்சித்தார். அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தி முதியவரை மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
News September 16, 2025
சிவகங்கை: தீபாவளி சிறப்பு ரயில்..BOOK பண்ணிக்கோங்க.!

சிவகங்கை, ரயில் எண் 16847 மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு, செப்டம்பர் 23, 27, 29 ஆகிய மூன்று நாட்களுக்கு மாற்று பாதையாக மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்டு காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக செங்கோட்டை செல்லும். எனவே சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் மேற்கண்ட 3 தேதிகளில் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான விரைவில் முன்பதிவு தொடங்குகிறது.
News September 16, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் தொடர்பு எண்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் (15.09.25) இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம். என சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.