News September 14, 2024
சிவகங்கை மாவட்டத்தில் பிரசவ கால பெண்கள் இறப்பு விகிதம்

சிவகங்கையில் உள்ள அனைத்து அரசு, தனியார் மகப்பேறு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்த பிரசவத்தில், 2024-2025ம் ஆண்டில் இதுவரை 4,787 குழந்தைகள் பிறந்துள்ளனர். இதில் பிரசவ கால பெண்களின் இறப்பு எண்ணிக்கை 4ஆக உள்ளது. அதே நேரம் 2022-2023ம் ஆண்டில் 16,667 குழந்தைகள் பிறந்ததில், 7 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர். 2023-2024ம் ஆண்டில் 16,210 குழந்தைகள் பிறந்த நிலையில், 8 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர்.
Similar News
News November 27, 2025
சிவகங்கை: கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன்

சிவகங்கை மாவட்டம், கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு வங்கிக் கல்வி கடன் முகாம் வருகின்ற 28.11.2025 அன்று காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக வளாக வீறு கவியரசர் முடியரசனார் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. உரிய ஆவணங்களுடன் மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
சிவகங்கை: கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன்

சிவகங்கை மாவட்டம், கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு வங்கிக் கல்வி கடன் முகாம் வருகின்ற 28.11.2025 அன்று காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக வளாக வீறு கவியரசர் முடியரசனார் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. உரிய ஆவணங்களுடன் மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன – ஆட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் அமராவதி புதூர், செஞ்சை நாட்டார், சங்கராபுரம் மற்றும் பாதரக்குடி ஆகிய கண்மாய்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.


