News April 12, 2025

சிவகங்கை: பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கும் கோயில்

image

சிவகங்கை, நாட்டரசன் கோட்டை பகுதியில் அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு களியாட்ட திருவிழா 48 நாட்களுக்கு பாரம்பரிய முறைப்படி நடைபெறும். இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இந்த கோயிலில் வந்து வேண்டினால் திருமணத் தடை, குழந்தை பாக்கியம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.*மற்றவர்களுக்கு பகிரவும்*

Similar News

News January 3, 2026

சிவகங்கை: 12th படித்தால் ஆதாரில் வேலை ரெடி!

image

சிவகங்கை மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

News January 3, 2026

காரைக்குடி: ஒன்றரை வயது குழந்தை சடலமாக மீட்பு

image

காரைக்குடி அருகே உள்ள கொத்தாரி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சுதாவின் ஒன்றரை வயது மகள் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது சுதா கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, சிறுமி காணாமல் போயிருந்ததையடுத்து, தேடிப் பார்க்கையில் அருகில் உள்ள குளத்தில் சிறுமி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டாார். இதுகுறித்து பள்ளத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 3, 2026

மருத்துவமனை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலமாக சிவகங்கை மாவட்ட இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் காலியாகவுள்ள பல்நோக்கு மருத்துவமனை பணியிடங்களுக்கு விண்ணப்பம் 05.01.2026 முதல் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பப் படிவம் சிவகங்கை மாவட்ட வலைதளம் http:sivagampu.nic.in வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!