News September 13, 2024

சிவகங்கை: பட்டாசு கடை அமைக்க அழைப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைத்திட விதிமுறைகளுக்குட்பட்டு உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய விண்ணப்பங்கள் மீது அக்.,20க்குள் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (செப்.13) தெரிவித்துள்ளார்.

Similar News

News December 1, 2025

சிவகங்கை பேருந்து விபத்து; பிரதமர் மோடி நிவாரணம்

image

பிரதமர் நரேந்திர மோடி இன்று 1.12.25 வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று 30.11.25 சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News December 1, 2025

சிவகங்கை: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்

image

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <>SANCHAR SAATHI<<>> என்ற செயலியில் சென்று உங்களது செல்போன் நம்பர், IMEI நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். அதன் பின் உங்களது தொலைந்த போன் BLOCK செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்படும். SHARE IT.

News December 1, 2025

காரைக்குடி விபத்து: மத்திய அரசு நிவாரணம் அறிவிப்பு

image

காரைக்குடியிலில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் மற்றொரு அரசு பேருந்தும் நேற்று எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 நபர்கள் இறந்துள்ளதாகவும் 30மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசின் சார்பில் 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.

error: Content is protected !!