News April 6, 2025
சிவகங்கை: பங்குசந்தை முதலீடு ஆசை காட்டி ரூ.26 லட்சம் மோசடி

தேவகோட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ் என்பவரின் மனைவி ப்ரீத்தி. கடந்த ஜனவரி மாதம் வாட்சப்பில் ஒருவர் தன்னை பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசராக ப்ரீத்திக்கு அறிமுகமானார். அவரிடம் அறிமுகமான கீர்த்தி 10-ற்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் 14 பரிவர்த்தனைகளில் 26 லட்சத்து 4 ஆயிரம் அனுப்பினார். பணத்தைப் பெற்ற அந்த நபர் முதலீட்டிற்கான லாபத்தை தரவில்லை. பிரீத்தி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணை.
Similar News
News August 9, 2025
சிவகங்கை: பேரூராட்சி செயல் அலுவலர்களின் எண்கள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்களின் எண்கள்
கானாடுகாத்தான் – 04565-283583
நாட்டரசன்கோட்டை – 04575-234300
இளையான்குடி – 04564-265246
திருப்புவனம் – 04574-265391
மானாமதுரை – 04574-268237
நெற்குப்பை – 04577-245411
சிங்கம்புணரி – 04577-242939
திருப்பத்தூர் – 04577-266295
பள்ளத்தூர் – 04565-283683
கண்டனூர் – 04565-282044
News August 9, 2025
சிவகங்கை: மன அமைதி பெற இங்க போங்க.!

சிவகங்கை நகரசூரக்குடியில் அமைந்துள்ளது தேசிகநாதர் கோயில். இங்குள்ள பைரவர் சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு. ஒரு யாகத்தில் சூரியன் பங்கேற்று, சிவனை அழைக்காததால் ஆத்திரமடைந்த சிவன், சூரியனை தண்டித்தார்.பின்னர் சிவன் கருணை கொண்டு சாப விமோசனம் தந்தார்.இதனடிப்படையில் அங்கு கோயில் எழுப்பப்பட்டது. குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, மன அமைதி பெற இங்கு வழிபட்டால் நடக்கும் என்பது ஐதீகம்.
News August 9, 2025
ஆங்கிலேயர் கால கல்வெட்டு கண்டடுப்பு

ஆங்கிலேய ஆட்சியின் போது இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தையும், புதுக்கோட்டை அரசையும் பிரிக்கும் எல்லைக்கல் ஒன்று சிவகங்கை நெற்குப்பைக்கும் புதுக்கோட்டை வேந்தன்பட்டிக்கும் நடுவே உள்ள பள்ளத்துப்பட்டி விலக்கு அருகே புதர் மண்டிய இடத்தில் காணப்பட்டது. காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் ராஜேந்திரன் ஆய்வு செய்தனர்.