News April 6, 2025
சிவகங்கை: பங்குசந்தை முதலீடு ஆசை காட்டி ரூ.26 லட்சம் மோசடி

தேவகோட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ் என்பவரின் மனைவி ப்ரீத்தி. கடந்த ஜனவரி மாதம் வாட்சப்பில் ஒருவர் தன்னை பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசராக ப்ரீத்திக்கு அறிமுகமானார். அவரிடம் அறிமுகமான கீர்த்தி 10-ற்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் 14 பரிவர்த்தனைகளில் 26 லட்சத்து 4 ஆயிரம் அனுப்பினார். பணத்தைப் பெற்ற அந்த நபர் முதலீட்டிற்கான லாபத்தை தரவில்லை. பிரீத்தி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணை.
Similar News
News September 13, 2025
சிவகங்கை: ரிசர்வ் வங்கி வேலை விண்ணப்பிப்பது எப்படி?

▶️சிவகங்கை மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 13, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கல்

கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இன்று (13.9.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திசிதம்பரம் முன்னிலையில் அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
News September 13, 2025
சிவகங்கை: AI தொழில் நுட்பம் மூலம் இறந்த யானையின் சிலை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான சுப்புலெட்சுமி என்ற யானை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13 ந் தேதி எதிர்பாராத விதமாக தீ விபத்தில் சிக்கி இறந்துவிட்டது. அதற்கு நினைவாக குன்றக்குடியில் சிலை அமைக்க இன்று, செப்டம்பர் 13, பூமி பூஜை செய்யப்பட்ட நிலையில், யானையின் AI தொழில் நுட்ப சிலை வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.