News April 2, 2025

சிவகங்கை :  கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு

image

19 வயதுக்குட்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு சனிக்கிழமை (ஏப்ரல்.5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் 1.9.2006 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். வெள்ளை சீருடை, ஷூ, அணிந்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு கைப்பேசி எண் 9865615649 -இல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

Similar News

News December 4, 2025

சிவகங்கை: குறைந்த விலையில் சொந்த வீடு வேண்டுமா?..

image

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக வீடுகள் வழங்கப்படும். இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இங்கு கிளிக் செய்து உங்க மாவட்டத்திற்கு வீடுகள் உள்ளதா என்பதை செக் பண்ணுங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 4, 2025

சிவகங்கை: கூடுதல் லாபம் எனக்கூறி இளைஞரிடம் மோசடி

image

சிங்கம்புனரியை சேர்ந்த 39 வயதான இளைஞரை, வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு ஒருவர் தான் குறிப்பிடும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி அந்த இளைஞர் ரூ.64 ஆயிரம் பணத்தை 3 தவனைகளாக செலுத்தியுள்ளார். பின்னர் இளைஞர் பணத்தை பெற்ற நபரை தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டத்தை உனர்ந்து, சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

News December 4, 2025

காரைக்குடி: பள்ளி மாணவன் தற்கொலை

image

காரைக்குடி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருடைய மகன் மணிகண்டன் (15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் பள்ளி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், பெற்றோர்கள் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!