News April 2, 2025

சிவகங்கை :  கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு

image

19 வயதுக்குட்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு சனிக்கிழமை (ஏப்ரல்.5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் 1.9.2006 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். வெள்ளை சீருடை, ஷூ, அணிந்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு கைப்பேசி எண் 9865615649 -இல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

Similar News

News December 5, 2025

சிவகங்கை: ரூ.5 லட்சம் மற்றும் தங்கம் பெற ஆட்சியர் அழைப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில், சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவதற்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதிற்கு வரும் டிச.18 க்குள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்திடல் வேண்டும் என‌ ஆட்சியர் தெரிவித்துள்ளார். இவ்விருதில் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு, ஒரு சவரன் தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.

News December 5, 2025

சிவகங்கை: சாலை விபத்தில் வாகன ஓட்டிகள் 17 பேர் பலி

image

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆயிரத்து 154 சாலை விபத்துக்களில் 358 பேர் உயிரிழந்துள்ளனர். 791 பேர் காயம் அடைந்தனர். மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள அபாயகரமான வளைவு, அதி வேகம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவைகளால் தினமும் விபத்துக்கள் நடக்கின்றது. இதில் இருசக்கர வாகன விபத்துக்களில் இறந்தவர்களே அதிகம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

News December 5, 2025

சிவகங்கை: கொத்தடிமையாக இருந்த குடும்பம் மீட்பு

image

தலக்காவயல் கிராமத்தில் கொத்தடிமை முறையில் ஒரு குடும்பம் வேலை செய்ய வைக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் தேவகோட்டை சார்பு ஆட்சியர், வட்டாட்சியர்,  ஐ.ஆர்.சி.டி.சி குழுவினர் இணைந்து மேற்கொண்ட சோதனையில், பாரதிராஜா, தனது ஆடுகளை மேய்ப்பதற்காக வரதராஜன், சரண்யா, அவர்களது ஒன்றரை வயது குழந்தையை கொத்தடிமைகளாக வைத்திருப்பது உறுதியானது. அந்த குடும்பம் மீட்கப்பட்டு, பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

error: Content is protected !!