News August 10, 2024

சிவகங்கை ஆதிதிராவிடர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மூன்று வருட முழு நேர பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயில்வதற்கு https://www.tahdco.com/ என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.

Similar News

News December 13, 2025

சிவகங்கை மாவட்ட மக்களே., இன்று விரைவில் தீர்வு!

image

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதிபதியுமான அறிவொளி நேற்று செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், சிவகங்கை மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை (டிச.13) 11 அமா்வுகளில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகளில் பொதுமக்கள் கலந்து கொண்டு நிலுவையிலுள்ள தங்களது வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணலாம் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

News December 13, 2025

சிவகங்கை: பள்ளியில் சமைத்து சாப்பிட்ட திருடர்கள்.!

image

கல்லல் அருகேயுள்ள ஆலங்குடி ஊராட்சி, மேலமாகாணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு வந்த திருடர்கள் சமையல் அறையில், சத்துணவு முட்டைகளை, கேஸ் அடுப்பில் அவித்து சாப்பிட்டு விட்டு கணினி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் அளித்த புகாரின் பேரில் கல்லல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 12, 2025

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்

image

சிவகங்கை மாவட்டம், 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வானது, நிர்வாக காரணங்களினால் வருகின்ற 27.12 2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!