News June 26, 2024
சிவகங்கை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 2023 – 24ஆம் ஆண்டிற்கான, மணிமேகலை விருதுக்கு தகுதியுள்ள சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், கூடுதல் விபரங்களுக்கு திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம், சிவகங்கை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04575-240962 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா தெரிவித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
சிவகங்கை: 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் கட்டடப் பணியாளர் சிவக்குமார், கடந்த 2018 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக இவா் மீது வழக்கு நடந்து வந்தது.இவ்வழக்கை சிவகங்கை நீதிமன்றத்தில் நேற்று விசாரித்த நீதிபதி கோகுல் முருகன்
குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
News October 29, 2025
சிவகங்கை: விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 31.10.25 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தின் அனைத்து துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
சிவகங்கை: ஆதார், பான் கார்டு இருக்கா…? இது கட்டாயம்!

சிவகங்கை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு<
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க


