News October 10, 2025
சிவகங்கை: ஆசிரியர் தேர்வு வாரியம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 14 மையங்களில் 3888 பேர் எழுத உள்ளனர். அதில் சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடியில் அமைந்துள்ள 14 தேர்வு மையங்களில் மாநில அளவில் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, 1996 பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு அக்டோபர் 12 நடைபெறுகிறது.
Similar News
News December 14, 2025
சிவகங்கை: ரூ.1000 வரலையா… மேல்முறையீடு செய்வது எப்படி!

சிவகங்கை மக்களே, ரூ.1000 வராதவங்க மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு வழிமுறை:
1.இங்கு <
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, சிவகங்கை கோட்டாட்சியரை 04575-240243 அழையுங்க
SHARE பண்ணுங்க..
News December 14, 2025
சிவகங்கையில் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

சிவகங்கை மக்களே, ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 14, 2025
சிவகங்கை: கோவிலில் உண்டியல் திருட்டு.!

இளையான்குடி அருகே குறிச்சி கிராமத்தில் காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு வந்த சுப்பிரமணியன் என்பவர் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இளையான்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு திருடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


