News August 8, 2024

சிவகங்கை அருகே பட்டிமன்ற பேச்சாளருக்கு விருது

image

கண்டரமாணிக்கம் அருகே தெற்குபட்டி மாணிக்க நாச்சி அம்மன் கோவிலில், பட்டிமன்ற பேச்சாளர் தேவகோட்டை ராமநாதனுக்கு உலக தமிழ் பறவை என்னும் பட்டய விருதையும் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் ஆன பொற்கிழியையும் பிள்ளையார்பட்டி சிவஸ்ரீ பிச்சை குருக்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள் கல்வி நிறுவனங்கள், ஊர் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 2, 2025

காரைக்குடி: கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

image

காரைக்குடி அருகேயுள்ள அமராவதிப் புதூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த குணசேகரன் (54) நேற்று திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து குணசேகரன் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சோமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 2, 2025

சிவகங்கையில் இளைஞர் வெட்டி கொலை

image

சிவகங்கை அருகே மதுரை முக்கு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் ராஜேஷ் (21) என்பவர், நேற்று இரவு பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று மர்ம நபர்கள் ராஜேஷை விரட்டியுள்ளனர். அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகம் பகுதியில் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News November 2, 2025

சிவகங்கை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

சிவகங்கை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!