News September 15, 2024
சிவகங்கையில் 1,207 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 13 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நேற்று (செப்.14) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகள் மூலம் 1,207 வழக்குகளுக்கு 5 கோடியே 95 லட்சத்து 36 ஆயிரத்து 534 ரூபாய்க்கு தீா்வு காணப்பட்டு வழக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.
Similar News
News November 15, 2025
சிவகங்கையில் 17 வயது சிறுவன் மீது வழக்கு

புதுவயல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 4 அடி நீளமுள்ள வாளை கையில் பிடித்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் வீடியோ எடுத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கணேசமூர்த்தி வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும், சிறுவனிடமிருந்து அந்த வாள் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 15, 2025
சிவகங்கை: கேஸ் சிலிண்டர் வைத்திருபோர் கவனத்திற்கு

சிவகங்கை மக்களே, கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 15, 2025
சிவகங்கை: SIR பணிகளில் அதிக கவணம் வேண்டும் -எம்எல்ஏ

சிவகங்கை தனியார் அரங்கில் நடைபெற்ற அதிமுக சார்பு அணியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் சிவகங்கை எம்எல்ஏ பி.ஆர். செந்தில்நாதன் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளர்கள் விடுபடாமல் சேர்க்கும் நடவடிக்கையில் அதிமுகவினர் அதிக கவனம் செலுத்த வேண்டும். இரட்டை பதிவுகள் மற்றும் போலி வாக்காளர் பதிவுகளில் ஏற்படும் முறைகேடுகளை கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றார்.


