News April 16, 2025
சிவகங்கையில் ரூ.45 ஆயிரத்தில் அரசு வேலை

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.
Similar News
News November 17, 2025
காளையார்கோவில் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

காளையார்கோவில் அருகே ஒரு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள கன்மாயில் உறவினர்கள் மீன் பிடித்து வருவதாக சொல்லி அங்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, பருத்திக்கன்மாய் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (25) என்ற இளைஞர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 17, 2025
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் வேலை

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Project Associate, Project Assistant பணியிடங்களுக்கு மொத்தமாக 24 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு B.Sc, BE/B.Tech, Diploma, M.Sc, PhD, படித்திருக்க வேண்டும்.மாத சம்பளம் ரூ.78,000 வரை வழங்கப்படும். இங்கே <
News November 17, 2025
சிவகங்கை:வட்டாட்சியரை கடித்த நாய்; பறந்த நோட்டீஸ்.!

சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில், தேர்தல் வட்டாட்சியர் மேசியதாஸ் நேற்று இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது வெறிநாய் அவரது காலை கடித்து குதறியது. மாவட்ட ஆட்சியர் பொற்கொடி சிவகங்கை தெருக்களில் ஆய்வு செய்தபோது சில இடங்களில் குழந்தைகள், பெரியவர்களை நாய்கள் விரட்டி சென்று அச்சுறுத்துவதை பார்த்து நகராட்சி ஆணையர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.


