News April 25, 2025
சிவகங்கையில் உள்ள ராகு கேது பரிகார ஸ்தலம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாகமுகுந்தன் நாகநாதசுவாமி கோயில் ராகு கேது பரிகார ஸ்தலாமாக விளங்குகிறது. இக்கோயிலில் நாகநாதர், செளந்தரநாயகி சன்னதியும், பிள்ளையார், முருகன், சூரியன், பைரவர் உப சன்னதிகளும் உள்ளன. ராகு கேது தோஷங்களுக்கு பரிகாரம் செய்ய கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ராகு கேதுவின் தியானம் செய்வது ராகு கேதுவின் அருள் பெற உதவும் என்று கூறப்படுகிறது.
Similar News
News November 11, 2025
துணை முதல்வர் வருகை; முன்னேற்பாடுகள் தீவிரம்

சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 14.11.2025 மற்றும் 15.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி,, அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் இன்று (10.11.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு மேற்கொண்டார்.
News November 10, 2025
சிவகங்கை: உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? இத பண்ணுங்க

சிவகங்கை மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 9443111912 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News November 10, 2025
காரைக்குடி: 27 மீது வழக்குப்பதிவு

காரைக்குடி பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கோரி, சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 27 நபர்கள் மீது காரைக்குடி காவல் நிலைய காவல் உதவி சார்பு ஆய்வாளர் ஜெயராமன் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


