News April 16, 2024
சிவகங்கையில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை

சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News December 5, 2025
சிவகங்கை: இனி Whatsapp மூலம் ஆதார் கார்டு!.

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 5, 2025
சிவகங்கை: இந்த பகுதிகளில் மின் தடை!

காரைக்குடி, நெலுமுடிக்கரை, திருப்பாச்சேத்தி, பொட்டப்பாளையம், சிங்கம்புனரி, அ.காளாப்பூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச 6) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. பாரி நகர், பேயன்பட்டி, பழையூர், செல்லப்பனேந்தல், மாரநாடு, ஆவரங்காடு, புலியூர், கொந்தகை, செருதப்பட்டி, என்பீல்டு, எஸ்.வி.மங்கலம், பிரான்மலை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
News December 5, 2025
சிவகங்கை: 10th போதும் அரசு பள்ளி வேலை., மீண்டும் வாய்ப்பு!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <


