News August 16, 2024

சிவகஙகை அருகே ரூ.10 லட்சம் மோசடி

image

சிங்கம்புணரி அருகே மேலவண்ணாரிருப்பைச் சேர்ந்தவர் சக்திவேல் (41), தனியார் கல்லூரி உடற்கல்வி பயிற்றுநர். இவரிடம்,பிரான்மலையைச் சேர்ந்த சேவுகமூர்த்தி, அவரது மனைவி சாந்தி ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் கடந்த ஆண்டு பெற்றுள்ளனர். ஆனால், இது வரை வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து புகாரில், நேற்று குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News

News December 9, 2025

சாலை கிராமம் பேருந்து நிலைய பணியை பார்வையிட்ட எம்எல்ஏ

image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாலை கிராமத்தில் புதியதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதை இன்று மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கட்சியை சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News December 9, 2025

சிவகங்கை பயணிகளின் கனிவான கவனத்திற்கு

image

சிலம்பு எக்ஸ்பிரஸ் (20682) வியாழன் சனி ஞாயிறு மட்டும் இயங்கும் ரயில் சேவை சிவகங்கை ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும்
செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு தென்காசி, சங்கரன்கோவில், இராஜபாளயம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மானாமதுரை
சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி வழி இரவு 9 மணிக்கு புதுக்கோட்டை திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வரை செல்லும்.

News December 9, 2025

சிவகங்கை: வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!

image

இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தில் களையெடுக்கும் பணி முடித்துவிட்டு, ஒரு மினி வேனில் 20க்கும் மேற்பட்டோர் வந்தனர். பெருமானேந்தல் அருகே மினிவேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்ததில், குயவர்பாளையத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!