News August 16, 2024
சிவகஙகை அருகே ரூ.10 லட்சம் மோசடி

சிங்கம்புணரி அருகே மேலவண்ணாரிருப்பைச் சேர்ந்தவர் சக்திவேல் (41), தனியார் கல்லூரி உடற்கல்வி பயிற்றுநர். இவரிடம்,பிரான்மலையைச் சேர்ந்த சேவுகமூர்த்தி, அவரது மனைவி சாந்தி ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் கடந்த ஆண்டு பெற்றுள்ளனர். ஆனால், இது வரை வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து புகாரில், நேற்று குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News October 24, 2025
சிவகங்கை: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

சிவகங்கை மக்களே,சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கு <
News October 24, 2025
சிவகங்கை நுங்கு வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

சிவகங்கை காமராஜா் நகரை சேர்ந்தவர் பூமிநாதன். இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த முத்துபாண்டி என்பவருக்கும் இடையில் கடந்த 27.4.2018 அன்று நுங்கு வியாபாரம் செய்ததில் பிரச்சனை ஏற்பட்டு மறுநாள் சிவகங்கை வாரச்சந்தை முன் முத்துப்பாண்டியை பூமிநாதன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா். இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அறிவொளி, பூமிநாதனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
News October 24, 2025
சிவகங்கையில் பள்ளிகளுக்கு விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் அக்.27 மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் அக்.30 தேவர் குருபூஜை விழாவை ஒட்டி சிவகங்கை, காளையார் கோயில், திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய ஏழு ஒன்றியங்களுக்கு இந்த இரண்டு நாட்களும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதற்கு பதிலாக மற்றொரு நாள், வேலை நாளாக அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார்.


