News August 3, 2024

சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர்

image

கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவை, சுமார் ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 3) நடந்த திறப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர், ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பு-2024 அறிக்கையும் வெளியிட்டுள்ளார். மேலும், 9 நவீன வாகனங்களையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Similar News

News November 20, 2025

சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள்

image

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அணைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்க்கான கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்வதற்கு உதவிடும் வகையில் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 18.11.2025 முதல் தொடங்கிய இந்த உதவி மையங்கள் 25.11.2025 காலை 10 மணி முதல் 6 மணி வரை செயல்படும். இந்த உதவி மையங்களில் சம்மந்தப்பட்ட பகுதியின் வாக்காளர்கள் பயன்படுத்தலாம்

News November 20, 2025

மீனவ இளைஞர்களுக்கு குடிமைப்பணி தேர்வு ஆயத்த பயிற்சி

image

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ பட்டதாரி இளைஞர்கள் குடிமை பணி போட்டி தேர்வுக்கான ஆயத்த பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். சேர www.fisheries.tn.gov.in விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து சின்ன நீலாங்கரையில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வரும் 25 – ம் தேதிக்குள் அனுப்பவும் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

News November 20, 2025

சென்னை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பில், நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம் நாளை (நவ.21) வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!