News April 29, 2025
சிறுவர் கொலை வழக்கு: தாய் பரபரப்பு வாக்குமூலம்!

வாழப்பாடியை,துக்கியாம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமாரின் மனைவி இளவரசி. இவர்களது மகன்களான விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) ஆகிய இருவரும் நேற்று தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து வாழப்பாடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கண்டித்ததால் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக இளவரசி வாக்குமூலம் அளித்துள்ளார். இளவரசியை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 16, 2025
சேலத்தில் பிரபல நடிகரின் செயல்!

சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள அரசு பார்வையற்றோர் நடுநிலைப் பள்ளியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு திரைப்பட நடிகரும் சமூக ஆர்வலருமான திருப்பாச்சி பெஞ்சமின் உணவு வழங்கினார்.அதனைத் தொடர்ந்து அங்குள்ள மாணவ மாணவிகளிடம், மாணவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
News December 16, 2025
சேலத்தை உலுக்கிய ₹30 கோடி மோசடி!

சேலம் நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மற்றும் மகேந்திரன் ஆகியோர், பொதுமக்களிடம் மாதாந்திர சீட்டு மூலம் சுமார் ₹30 கோடி ரூபாய் திரட்டி, தற்போது பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள், பணத்தை மீட்டுத் தரவும், மோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
News December 16, 2025
மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு தேதி மாற்றம்!

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு டிச.13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால் டிச.27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் பிருந்தாதேவி அறிவிப்பு!


