News April 29, 2025
சிறுவர் கொலை வழக்கு: தாய் பரபரப்பு வாக்குமூலம்!

வாழப்பாடியை,துக்கியாம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமாரின் மனைவி இளவரசி. இவர்களது மகன்களான விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) ஆகிய இருவரும் நேற்று தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து வாழப்பாடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கண்டித்ததால் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக இளவரசி வாக்குமூலம் அளித்துள்ளார். இளவரசியை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 6, 2025
சேலத்தில் மேள தொழிலாளி கொலை!

அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்த் (23).மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார். இவரை கடந்த 1ல், இரவு 6 பேர் கொண்ட கும்பல் போதையில் தாக்கி தலையில் கல்லைத்தூக்கி போட்டு சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ஜெயகாந்த் உயிரிழந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே சிறுவன் உள்ளிட்ட 5 பேரை காரிப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர்.
News December 6, 2025
சேலம்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 6, 2025
சேலம்: இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்


