News April 29, 2025

சிறுவர் கொலை வழக்கு: தாய் பரபரப்பு வாக்குமூலம்!

image

வாழப்பாடியை,துக்கியாம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமாரின் மனைவி இளவரசி. இவர்களது மகன்களான விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) ஆகிய இருவரும் நேற்று தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து வாழப்பாடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கண்டித்ததால் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக இளவரசி வாக்குமூலம் அளித்துள்ளார். இளவரசியை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 28, 2025

சேலம்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், சேலம் மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News November 28, 2025

சேலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் ரூ.5 லட்சம் திருட்டு

image

சேலம் அருகே கூட்டாத்துப்பட்டியில் மேஸ்திரி நாராயணசாமி குடும்பம். நேற்று உறவினர் திருமணத்திற்குச் சென்றிருந்த போது, அவர்கள் வீட்டு பூட்டு உடைத்து, பீரோவை உடைத்து ரூ.5 லட்சம் பணம், 1 1/2 பவுன் நகை மற்றும் 70 கிராம் வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். திருடர்கள் சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி பதிவு கருவியையும் எடுத்துச் சென்றது காரிப்பட்டி போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

News November 28, 2025

சேலம்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே<> கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி டிச.01 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!