News April 29, 2025
சிறுவர் கொலை வழக்கு: தாய் பரபரப்பு வாக்குமூலம்!

வாழப்பாடியை,துக்கியாம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமாரின் மனைவி இளவரசி. இவர்களது மகன்களான விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) ஆகிய இருவரும் நேற்று தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து வாழப்பாடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கண்டித்ததால் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக இளவரசி வாக்குமூலம் அளித்துள்ளார். இளவரசியை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 21, 2025
பார்சல்களுக்காக முதல் முறையாக தனி ரயில்

தெற்கு ரயில்வே சார்பில் பார்சல்களை மட்டும் அனுப்புவதற்கு தனியாக 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் வரும் டிச.12-ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. மங்களூரு-சென்னை ராயபுரம் வரை இயக்கப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த பெட்டிகளில் தலா 23 டன் பார்சல் ஏற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சேலம் கோட்டம் சார்பில் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வரும் நவ.22- ஆம் தேதி முதல் நவ.24- ஆம் தேதி வரை சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர், ஓசூர் உள்பட பல்வேறு நகரங்களுக்கு சுமார் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 21, 2025
சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சேலம் கோட்டம் சார்பில் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வரும் நவ.22- ஆம் தேதி முதல் நவ.24- ஆம் தேதி வரை சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர், ஓசூர் உள்பட பல்வேறு நகரங்களுக்கு சுமார் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


