News April 29, 2025

சிறுவர் கொலை வழக்கு: தாய் பரபரப்பு வாக்குமூலம்!

image

வாழப்பாடியை,துக்கியாம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமாரின் மனைவி இளவரசி. இவர்களது மகன்களான விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) ஆகிய இருவரும் நேற்று தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து வாழப்பாடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கண்டித்ததால் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக இளவரசி வாக்குமூலம் அளித்துள்ளார். இளவரசியை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 24, 2025

மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவி வழங்கிய ஆட்சியர்!

image

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நல உதவிகள் கோரி விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் நான்கு நபர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மொத்தம் ரூபாய் 2.5 லட்சம் மதிப்பிலான நவீன இரு சக்கர நாற்காலி வாகனங்களை வழங்கினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News November 24, 2025

ஏற்காடு ட்ரக்கிங் செல்வோர் கவனத்திற்கு!

image

ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி–குண்டூர், கொண்டப்பநாயக்கன்பட்டி–குண்டூர் டிரெக்கிங் ரூட்டுகளுக்கான ஆன்லைன் புக்கிங் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவையான ஏற்பாடுகள் முடிந்தவுடன் புக்கிங் மீண்டும் தொடங்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

News November 24, 2025

சேலம் மாநகர காவல்துறை – சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவுரை

image

சேலம் மாநகர காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு அறிவுரை வெளியிடப்பட்டது. போக்குவரத்து சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்பான் மற்றும் எச்சரிக்கை கோன்களை அகற்றாமல் பாதுகாப்பாக கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றினால் விபத்துக்களைத் தவிர்க்கலாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!