News April 29, 2025
சிறுவர் கொலை வழக்கு: தாய் பரபரப்பு வாக்குமூலம்!

வாழப்பாடியை,துக்கியாம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமாரின் மனைவி இளவரசி. இவர்களது மகன்களான விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) ஆகிய இருவரும் நேற்று தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து வாழப்பாடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கண்டித்ததால் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக இளவரசி வாக்குமூலம் அளித்துள்ளார். இளவரசியை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News October 22, 2025
சேலம்: பால் பண்ணை தொடங்க மானியம் பெறுவது எப்படி?

1)சேலம் மக்களே.., மத்திய அரசின் DEDS திட்டத்தின் மூலம் பால் பண்ணை தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
2)பால் பண்ணை, பால் கடை, பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, கால்நடைகள் உள்ளிட்டவைக்கு மானியம் வழங்கப்படும்.
3)கடனை திரும்பச் செலுத்த 6 மாதம் – 3 ஆண்டுகள் வரை சலுகை காலம் சில இடங்களில் உண்டு.
4) இதற்கு விண்ணப்பிக்க நபார்டு வங்கி, கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளை அணுகவும். (SHARE)
News October 22, 2025
சேலம்: அரசு வங்கியில் சூப்பர் வேலை! APPLY NOW

சேலம் பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா…? உங்கள் வங்கிப் பணிக் கனவைத் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. அரசு வங்கியின் UCO வங்கியில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க அக்.30ஆம் தேதியே கடைசி நாள். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News October 22, 2025
சேலம்: மழையால் பாதிப்பா..? உடனே CALL!

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்க அந்தந்த மண்டல கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மைய அலுவலகம்: 0427-2212844, கொண்டலாம்பட்டி மண்டலம்: 0427 -2461313, அஸ்தம்பட்டி மண்டலம்: 0427 -2310095, சூரமங்கலம் மண்டலம்: 0427-2387514, அம்மாபேட்டை மண்டலம்: 0427 -2263161. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!