News April 18, 2025

சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

image

கீழ்வேளூரை சேர்ந்தவர் மாதவன், இவர், அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக, ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கடந்த 2021, ஜூன் 28ம் தேதி அளித்த புகாரி பேரில் மாதவன் போக்சோ சட்டத்தில் கைதானார். இதையடுத்து நாகை போக்சோ கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில் மாதவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கார்த்திகா உத்தரவிட்டார்.

Similar News

News October 19, 2025

நாகை: சிக்கல் சிங்காரவேலவருக்கு கந்த சஷ்டி திருவிழா

image

நாகை மாவட்ட பிரசித்தி பெற்ற சிக்கல் நவநீதேஸ்வரர் சுவாமி கோயிலில், சிங்காரவேலருக்கு கந்த சஷ்டி திருவிழாவை வருகிற அக்.21ஆம் தேதி முதல் அக்.31ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது. அதனையொட்டி முதல் நாளான அக்.21ம் தேதி கணபதி ஹோமம் – வாஸ்து சாந்தியும் நடைப்பெற உள்ளது என செயல் அலுவலர் ப.மணிகண்டன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதில், பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News October 19, 2025

நாகை: புதிய காற்றழுத்த தாழ்வு நிலை- எச்சரிக்கை

image

மன்னர் வளைகுடா, தெற்கு அந்தமான் மற்றும் அதனியொட்டி கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வருகிற அக்.21ம் தேதி தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, மேற்கு திசையில் வலுப்பெற கூட வாய்ப்பு உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கடலுக்கு சென்றவர்கள் கரைத்திரும்ப வேண்டுமென மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News October 19, 2025

நாகையில் மழையால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

image

திருமருகல் ஒன்றிய பகுதிகளில் 3,583 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயரான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர்கள் அழுகி துர்நாற்றம் விசுகிறது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். மேலும் அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!