News April 16, 2025
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்

கடந்த 2018 மார்ச் 5ம் தேதி தாம்பரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி விளையாடிய கொண்டிருக்கும் போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் முருகனுக்கு ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கபட்ட சிறுமிக்கு 3 லட்ச ருபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News October 23, 2025
செங்கல்பட்டில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க
News October 23, 2025
செங்கல்பட்டு: ரவுடியை வெட்டிய 7 பேர் கைது

மேற்கு தாம்பரம், காதர்பாய் தெருவைச் சேர்ந்தவர் சீனி முகமது, 32; ரவுடி. தீபாவளியன்று இரவு ஆறு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் இவரை வெட்டி விட்டு தப்பினர். வழக்கு பதிந்த தாம்பரம் போலீசார், மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த செஷான், 25, இரும்புலியூரைச் சேர்ந்த கிரி, 25, உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News October 23, 2025
செங்கல்பட்டு: அடுத்தடுத்து பேருந்துகள் மோதி விபத்து

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கடலுார் நோக்கி, அரசு பேருந்து புலிப்பாக்கம் சந்திப்பு அருகில் சென்ற போது, பின்னால் சென்னை- படாளம் நோக்கி வந்த தனியார் மருத்துவக் கல்லுாரி பேருந்து, அரசு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. சென்னை- நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து மோதியது. இதனால் யணியர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


