News April 27, 2025

சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றிய கொத்தனார் 

image

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 17 வயது சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி  கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் சிறுமியிடம் விசாரித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றிய செம்பனார்கோயில் முடிகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த கொத்தனார் சுந்தர்ராஜ் (28) என்பவரை கைது செய்தனர்.

Similar News

News January 1, 2026

மயிலாடுதுறை: SP தலைமையில் குறைதீர் நாள் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில், வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு SP-யிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு SP அறிவுறுத்தினார். காவல் ஆளிநர்களின் 2 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News January 1, 2026

மயிலாடுதுறை: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம்<>, https://cms.rbi.org.in <<>>என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும் சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE NOW!

News January 1, 2026

மயிலாடுதுறை: ரயில் நேரமாற்றம் அறிவிப்பு

image

சென்னை எழும்பூரில் இருந்து மயிலாடுதுறை வழியாக திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்படும் தினசரி சோழன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளை ஜனவரி 1ஆம் தேதி முதல் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து 15 நிமிடம் தாமதமாக காலை 8 மணிக்கு புறப்படும் எனவும் திருச்சியில் இருந்து சென்னைக்கு 1 மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக மதியம் 12:10 மணிக்கு ரயில் புறப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!