News March 28, 2025
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு

திருவண்ணாமலையை சேர்ந்தவர் அப்துல்கரீம். இவர் 17 வயது சிறுமியை கடந்தாண்டு வேலூரில் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சிறுமி கர்ப்பமானதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து நேற்று சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், அப்துல்கரீம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 5, 2025
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

காட்பாடியைச் சேர்ந்தவர் ஜாகீர்(50), கூலித் தொழிலாளியான இவர், 4ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை அழைத்து சென்று நேற்று (ஏப்ரல் 4) பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றுள்ளார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாரை அழைத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காட்பாடி போலீசார், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஜாகீரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
News April 5, 2025
நாட்டுக்காக இன்னுயிர் நீத்த வேலூர் இளைஞர்கள்

ராணுவப் பணிக்கு தங்களை அதிக அளவில் ஈடுபத்திக் கொண்டு, வீரதீரத்துடன் ஆத்மார்ந்த சேவை செய்பவர்களை அதிகமாகக் கொண்டு, தேசத்தில் மற்ற மாவட்டங்களை மிஞ்சும் வகையில் உள்ளது வேலூர். வேலூர் லாங்கு பஜார் மணிக்கூண்டு கட்டடத்தில் உள்ள கல்வெட்டில் “இந்த ஊரிலிருந்து 1914-18இல் நடந்த முதலாம் உலகப் போரில் 277 ஆண்கள் பங்கேற்று, அவர்களில் 14 பேர் தங்கள் இன்னுயிரை நீத்தனர்” என்ற வரிகள் ஆங்கிலத்தில் இருக்கும்.
News April 5, 2025
ராமேஸ்வரத்திற்கு விரைந்த வேலூர் போலீசார்

ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகிற 6-ம் தேதி வருகிறார். எனவே பிரதமர் வருகையொட்டி பாதுகாப்பு பணிக்காக வேலூரில் இருந்து 30 போலீசார் மற்றும் வேலூர் வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசார் 5 பேர் என மொத்தம் 35 பேர் 2 குழுக்களாக ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றனர். அவர்கள் அங்கு 3 நாள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என எஸ்பி மதிவாணன் தெரிவித்துள்ளார்.