News May 15, 2024
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

திருவண்ணாமலை, செங்கம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை அவரது உறவினரான கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த லோகேஷ் என்ற வாலிபர் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சைல்ட் லைனில் வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்த லோகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 22, 2026
தி.மலை: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில்<
News February 22, 2026
தி.மலையில் பயனடைந்த 76,256 பேர்

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பல்நோக்கு உயர்தர சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 76,256 பேருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தர்ப்பகராஜ் பேசினார்.
News February 22, 2026
தி.மலையில் துரத்தி துரத்தி கடித்த நாய்கள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு பகுதியில் இருந்து நேற்று (பிப்.21) திருவண்ணாமலை பேகோபுர 11-வது தெரு பகுதியில் புள்ளிமான் ஒன்று உணவு தேடி வந்தது. அந்த மானை அங்கிருந்த 5க்கும் மேற்பட்ட நாய்கள் துரத்தி துரத்தி கடித்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் அந்த மானை உயிருடன் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றனர்.


