News April 6, 2025

சிறுமியை கொலை செய்த காதலன் கைது

image

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோமா கோபா (19). இவர், யாஷ்மதி போபோங் (16) என்ற சிறுமியுடன் குன்றத்துார் அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். கடந்த மார்ச் 29ஆம் தேதி, சிறுமி யாஷ்மதி போபோங் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில், தகராறில் சோமா கோபாதான் யாஷ்மதியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலைபோல் நாடகமாடியது தெரிந்தது.

Similar News

News December 18, 2025

காஞ்சிபுரம்: விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை(டிச.19) காலை 11.00 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் டிசம்பர் 2025 மாதத்திற்கான கூட்டம் வரும் டிச.24ஆம் தேதி அன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு‌ள்ளது.

News December 18, 2025

காஞ்சிபுரம்: ஆதார் கார்டில் பிரச்னையா..? உடனே CALL!

image

காஞ்சிபுரம் மக்களே.., ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75, தொலைந்த ஆதாரை கண்டுபிடித்தல், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படுகிறது. மேலும், ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!

News December 18, 2025

காஞ்சிபுரத்தில் அஞ்சல் சேவை குறைதீர் முகாம்

image

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் இயங்கி வரும் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில், வரும் 22ஆம் தேதி காலை 10:00 மணிக்கு அஞ்சல் சேவை குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. அஞ்சல் சேவை தொடர்பான புகார்கள் உள்ளவர்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மனுக்கள் அளிக்கலாம். தனியார் கூரியர் மூலம் வரும் புகார்கள் ஏற்கப்படமாட்டாது என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!