News April 6, 2025

சிறுமியை கொலை செய்த காதலன் கைது

image

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோமா கோபா (19). இவர், யாஷ்மதி போபோங் (16) என்ற சிறுமியுடன் குன்றத்துார் அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். கடந்த மார்ச் 29ஆம் தேதி, சிறுமி யாஷ்மதி போபோங் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில், தகராறில் சோமா கோபாதான் யாஷ்மதியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலைபோல் நாடகமாடியது தெரிந்தது.

Similar News

News November 24, 2025

காஞ்சி: 10ஆவது படித்தால் உளவுத்துறை வேலை!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 362 ‘Multi Tasking staff; பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. டிச.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News November 24, 2025

வண்டலூர்: காதலியை தொல்லை செய்த வாலிபர் கைது!

image

வண்டலூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் கல்லூரியில் படிக்கும் போது சக நண்பரை காதலித்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணிற்கு சென்னையில் வேலை கிடைத்ததும், காதலை முறித்துக்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், காதலிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரில் ஆஸ்கர்(22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News November 24, 2025

காஞ்சி: விபத்தில் பெண் பரிதாப பலி!

image

காஞ்சி: கோனேரி குப்பம், துர்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி(65). இவர் கூலி வேலைக்குச் சென்று விட்டு திரும்பி வரும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!