News April 27, 2025
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

மானோஜிபட்டியைச் சேர்ந்தவர் கவியரசன் (24). இவருக்கும், அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அச்சிறுமியைக் கவியரசன் தனது வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அச்சிறுமி 4 மாத கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின்கீழ் கவியரசனை கைது செய்தனர்.
Similar News
News July 11, 2025
BREAKING: தஞ்சை வருகை தரும் பிரதமர் மோடி

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ளார். அதற்கு முன்னதாக அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. SHARE NOW
News July 11, 2025
கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: ராமதாஸ்

தஞ்சை, திருவாரூா் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் தனியாா் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, பாமக மாவட்டச் செயலா் ம.க.ஸ்டாலின் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தில் 2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் எனது விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
News July 11, 2025
தஞ்சையில் தயார் நிலையில் 155 தேர்வு மையங்கள் -ஆட்சியர்

தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-4 எழுத்துத் தோ்வு நாளை காலை நடைபெற உள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 43 ஆயிரத்து 517 தோ்வா்கள் பங்கேற்கவுள்ளனா். இதற்காக அனைத்து வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் 155 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்