News January 24, 2025

சிறுமியிடம் பாலியல் சீண்டல் – வாலிபரிடம் விசாரணை

image

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம், 21 வயது வாலிபர் தவறாக நடந்ததாக மண்டபம் போலீசிற்கு குழந்தைகள் நல அலுவலர் தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் மண்டபம் பொங்காளி தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் அபுர் நசீர் (21) என்பவரிடம் குழந்தைகள் நல அலுவலர் ராமேஸ்வரம் மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 16, 2025

ராம்நாடு: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

ராமநாதபுரம்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

image

ராமநாதபுரம் மக்களே, எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News November 16, 2025

தொண்டியில் கடல் சீற்றம்; கரை தாண்டிய கடல்நீர்

image

தொண்டி, (நவ.15)ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பருவ நிலை மாற்றத்தால் கடல் கரை தாண்டி காணப்பட்டது. தொண்டி கடல் பகுதியானது எப்பொழுதும் அதிகமான அலைகள் இல்லாமல் அமைதியாக காணப்படும். ஆனால் கடந்த இரு தினங்களாக வாடை காற்று அதிகமாகி கடல் சீற்றத்துடன் கடலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வழக்கத்தை விட கரையைத்தாண்டி கடல் தண்ணீர் அலைகளுடன் காணப்பட்டது. நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

error: Content is protected !!