News January 24, 2025
சிறுமியிடம் பாலியல் சீண்டல் – வாலிபரிடம் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம், 21 வயது வாலிபர் தவறாக நடந்ததாக மண்டபம் போலீசிற்கு குழந்தைகள் நல அலுவலர் தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் மண்டபம் பொங்காளி தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் அபுர் நசீர் (21) என்பவரிடம் குழந்தைகள் நல அலுவலர் ராமேஸ்வரம் மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
ராமநாதபுரம்: 5,810 காலியிடங்கள்.. கடைசி வாய்ப்பு! APPLY

ராமநாதபுரம் மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கு நவ.20 கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News November 21, 2025
மண்டபம் அருகே சுத்தியலால் தாக்கி இலங்கை அகதி கொலை

மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும், இலங்கை மன்னாரை சேர்ந்த கவிராஜ், 27; மலைச்செல்வம், 35; மணிகண்டன், 32, ஆகியோர் நேற்று முன் தினம் அப்பகுதியில் மது அருந்தினர்.அப்போது,ஏற்பட்ட தகராறில் மலைச்செல்வம், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து வந்து கவிராஜை தாக்கி தப்பினார். காயமடைந்த கவிராஜ், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை இறந்தார்.
News November 21, 2025
திருவாடானை அருகே அரசு பஸ் மோதி ஒருவர் பலி

திருவாடானை அருகே அந்திவயல் கிராமத்தை சேர்ந்தவர் சிமியோன் 55. இவர் அறிவித்தியில் இருந்து அந்திவயலை நோக்கி டூவீலரில் சென்றார். அந்திவயல் அருகே சென்ற போது எதிரில் வந்த அரசு பஸ் மோதியது.மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிமியோன் இறந்தார். திருவாடானை போலீசார் அரசு பஸ் டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்துாரை சேர்ந்த எழிலரசனை 41, கைது செய்தனர்.


