News January 22, 2025
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 20 ஆண்டு சிறை

விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த நஷீர் பாஷா என்பவர் 2017 ஆம் ஆண்டு எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம்விதித்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 5 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.
Similar News
News November 23, 2025
விழுப்புரம்: HOUSE OWNER பிரச்சனையா? இத பண்ணுங்க!

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News November 23, 2025
விழுப்புரம்: தனிக்குடித்தனம் சென்ற மகன்- தாய் தற்கொலை!

விழுப்புரம்: துலங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி தனலட்சுமி (55). இவர்களது மகன் சரவணன் தனிக்குடித்தனம் போகிறேன் எனக்கூறியதால் தனலட்சுமி மனமுடைந்து பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே தனலட்சுமி உயிரிழந்துவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
News November 23, 2025
விழுப்புரம்: சப்பாத்தி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு!

விழுப்புரம்: கரடிக்குப்பத்தை சேர்ந்தவர் தவமணி மகள் பூவரசி (14). நேற்று முன்தினம் இரவு பூவரசி சப்பாத்தி, குருமா சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார். பின்னர் நேற்று அதிகாலை 4 மணியளவில் பூவரசிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவளை பெற்றோர் சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே பூவரசி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


