News September 14, 2024
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது. இதுகுறித்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்ததில், சிறுமியின் உறவினரான 14 வயது சிறுவன், பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது. மேலும் சதீஷ்குமார்(32) என்பவரும் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. பின் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 13, 2025
BREAKING: சென்னையில் நீதிபதி மீது காலணி வீச முயற்சி

ஆளுனர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறி, ரவுடி கருக்கா வினோத், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 6வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மீது காலணி வீச முயன்றார். தி.நகர் டாஸ்மாக் வழக்கில் ஆஜர்படுத்தியபோது இந்த சம்பவம் நடந்தது. உடனே சுதாரித்த போலீசார் அவரை கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
News November 13, 2025
டிகிரி போதும் சென்னையில் சூப்பர் வேலை- APPLY HERE!

சென்னையில் Mahindra Finance நிறுவனத்தில் Sales Executive பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். அனுபவத்தின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்டும். விருப்பமுள்ள ஆண்கள் <
News November 13, 2025
சென்னையில் சாதனை மங்கைக்கு உற்சாக வரவேற்பு

13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு இன்று சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதனால் சென்னை வந்த அவருக்கு மேளதாளங்கள் முழங்க பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


