News April 6, 2025
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 22 ஆண்டு சிறை

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சையத் லியாகத் அலி (52). இவர் திருப்பத்துாரில் தங்கி, பணியாற்றி வந்தார். இவர் கடந்த, 2022 அக்., 7ல், 4 வயது சிறுமியை வீட்டிற்கு கடத்தி வந்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை, வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, அவருக்கு 22 ஆண்டுகள் சிறை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Similar News
News November 16, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் விழிப்புணர்வு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்கள் நலனுக்காக அவ்வப்போது சமூக வலைதளங்களில் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு புகைப்படங்களை பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ-16) காவல்துறை வலைதள பக்கத்தில். “வாகனம் ஓட்டுவதற்கு வயது மிக முக்கியம், வயது குறைந்த சிறார்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும்” என அறிவிக்கப்பட்டது.
News November 16, 2025
திருப்பத்தூர்: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.
News November 16, 2025
திருப்பத்தூர்: ரயில்வேயில் 3058 காலி பணியிடங்கள், APPLY NOW!

திருப்பத்தூர் மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <


