News January 12, 2025
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த எஸ்ஐ சஸ்பெண்ட்

மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றியவர் ஜெயபாண்டி. இவர், கடந்த டிச.13ம் தேதி திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, கோயிலுக்கு வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். நேற்று அவரை போக்சோவில் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். அவரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 8, 2025
மதுரை: விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி பலி

மதுரை, பரவையைச் சேர்ந்த கார்த்திக்(36) மற்றும் அவரது மனைவி சங்கீதா(21) இருவரும் சேர்ந்து டூவீலரில் மேலூர் – அழகர்கோவில் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.
அ.வல்லாளப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது, பின்னால் அமர்ந்து இருந்த சங்கீதா தடுமாறி விழுந்ததில் தலையில் அடிபட்டது. மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 8, 2025
மதுரை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

மதுரை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். e<
News December 8, 2025
மதுரை: வீட்டில் கரண்ட் இல்லையா? இத பண்ணுங்க.!

மதுரை மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.


