News November 23, 2024

சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி

image

தி.மலை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள், தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன்களை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கரபாண்டியன் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News November 11, 2025

தி.மலையில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

image

தி.மலை: மழையூர் துணை மின்நிலையத்தில் பராமாரிப்பு பணிகள் இன்று (நவ.11) நடைபெறவுள்ளது. இதனால், காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மழையூர், பெரணமல்லூர், தென்னாத்தூர், விசாகுளத்தூர், ஆணைபோகி, தேசூர், மேலச்சேரி, கடம்பை, மடம், தவனி, விசாமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 11, 2025

தி.மலை: ஆற்றில் மூழ்கி பலியான பள்ளி மாணவன்!

image

ஆரணி கோட்டை வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர்கள் ரவி-சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு சுனில்ராஜ் (11) என்ற ஒரு மகனும் உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் கமண்டல நதியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் ஆற்றில் மூழ்கியுள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், நேற்று (நவ.10) உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 11, 2025

தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரங்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.10) இரவு 10 மணி முதல் இன்று (நவ.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!