News August 8, 2024

சிறுதாவூர் அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் காயம்

image

திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து தலையில் விழுந்ததில் 6 மாணவர்கள் காயமடைந்தனர். சிறுதாவூரில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், இன்று பத்தாம் வகுப்பில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி வந்துள்ளார். அப்போது பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News December 16, 2025

செங்கல்பட்டு: 20 மான்கள் உயிரிழப்பு!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காப்புக் காடுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி இல்லாததால், மான்கள் அடிக்கடி வெளியேறி விபத்துகளில் சிக்குகின்றன. நடப்பாண்டில் மட்டும், வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும், பிளாஸ்டிக் கழிவுகளை உண்டும் 20க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. காடுகளுக்குள் நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை நிலவுவதால், மான்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளது.

News December 16, 2025

செங்கல்பட்டு: 20 மான்கள் உயிரிழப்பு!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காப்புக் காடுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி இல்லாததால், மான்கள் அடிக்கடி வெளியேறி விபத்துகளில் சிக்குகின்றன. நடப்பாண்டில் மட்டும், வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும், பிளாஸ்டிக் கழிவுகளை உண்டும் 20க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. காடுகளுக்குள் நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை நிலவுவதால், மான்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளது.

News December 16, 2025

செங்கல்பட்டு: ஆசிரியர் வீட்டில் 14 சவரன் நகை திருட்டு!

image

செங்கல்பட்டு பள்ளிக்குட தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் . இவர் சிங்கபெருமாள் கோவில், திருக்கச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். நேற்று இரவு இவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!