News August 14, 2024
சிறுதானிய சாகுபடிக்கு 40% உழவு மானியம்

தேனியில் சிறுதானிய சாகுபடி அதிகரிப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 40% மானியம் அதாவது ஒரு ஹெக்டேருக்கு ரூ.5400 வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 200 ஹெக்டேர் சிறுதானிய சாகுபடிக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம் பெறுவது தொடர்பான விபரங்களுக்கு வட்டார வேளாண் அலுவலகங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர்களை அணுகி விபரம் பெறலாம் என வேளாண் துறையினர் அறிவித்துள்ளது.
Similar News
News December 12, 2025
தேனி: பைக் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து

கம்பம் நாராயணத்தேவன் பட்டியை சேர்ந்தவர் அரசக்குமார். இவர் தனது ஆட்டோவில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்றார். கம்பம் GH அருகே கூடலூர் சாலையில் சென்றபோது பைக் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் காயமடைந்தனர். பின்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News December 12, 2025
அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்து சேவை செய்தவர்களுக்கு “அவ்வையார் விருது” மார்ச் 8 அன்று வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற தகுதி உடையவர்கள் https://awards.tn.giv.in என்ற இணையதளத்தின் வாயிலாக 31.12.2025-க்குள் பதிவு செய்து வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இணையத்தில் பதிவு செய்த ஆவணங்கள் கையேடாக மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 3.1.2026 அன்று சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
News December 12, 2025
தேனியில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்!

தேனி வழக்கறிஞர் கணேசன். இவர் தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கில் கண்டமனூர் வேல்முருகனுக்கு கடந்த மாதம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பளித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் அவரது நண்பர் அசோக்குமார் சேர்ந்து வழக்கறிஞர் கார் முன் டயர்களை சேதப்படுத்தி, ஆவணங்களை திருடி சென்றனர். மேலும், அலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வழக்கறிஞர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை.


