News August 14, 2024
சிறுதானிய சாகுபடிக்கு 40% உழவு மானியம்

தேனியில் சிறுதானிய சாகுபடி அதிகரிப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 40% மானியம் அதாவது ஒரு ஹெக்டேருக்கு ரூ.5400 வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 200 ஹெக்டேர் சிறுதானிய சாகுபடிக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம் பெறுவது தொடர்பான விபரங்களுக்கு வட்டார வேளாண் அலுவலகங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர்களை அணுகி விபரம் பெறலாம் என வேளாண் துறையினர் அறிவித்துள்ளது.
Similar News
News January 7, 2026
தேனியில் இலவச பியூட்டீசியன் பயிற்சி… APPLY..!

தேனி, கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் மத்திய அரசு சான்றிதழுடன் ஜன.19 -பிப்.25 வரை இலவச அழகுக்கலை பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஜன.19ஆம் தேதிக்கு முன் பயிற்சி மையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். தங்குமிடம், உணவு இலவசம். மேலும் விவரங்களுக்கு 9500314193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
News January 7, 2026
தேனி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…!

ஆண்டிபட்டி அருகே உள்ள தர்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி. இவரது மகன் அரவிந்த். இவர் சிறுவயதில் இருந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில், உடல்நிலை பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்து வந்த அரவிந்த் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மயிலாடும்பாறை காவல்துறை வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
News January 7, 2026
தேனியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்…!

மார்க்கையன்கோட்டை, போடி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் நாளை (ஜன.8) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சின்னமனூர் டவுன், பழவராயன்பட்டி, குந்தளநாய்க்கன்பட்டி, அம்மாப்பட்டி, போடி நகர்ப்புறம், குரங்கணி, மீனாட்சிபுரம், அணைக்கரைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. SHARE IT


