News August 14, 2024

சிறுதானிய சாகுபடிக்கு 40% உழவு மானியம்

image

தேனியில் சிறுதானிய சாகுபடி அதிகரிப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 40% மானியம் அதாவது ஒரு ஹெக்டேருக்கு ரூ.5400 வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 200 ஹெக்டேர் சிறுதானிய சாகுபடிக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம் பெறுவது தொடர்பான விபரங்களுக்கு வட்டார வேளாண் அலுவலகங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர்களை அணுகி விபரம் பெறலாம் என வேளாண் துறையினர் அறிவித்துள்ளது.

Similar News

News December 15, 2025

தேனி: இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் வாக்குமூலம்!

image

தேவாரம் முத்தையன்செட்டிபட்டியை சேர்ந்த தம்பதியர் பிரதீப், நிகிலா. குடும்ப பிரச்சனை காரணமாக நிகிலா, மனைவியின் சகோதரர் விவேக் இருவரையும் கணவர் பிரதீப் டிச.11ம் தேதி வெட்டி படுகொலை செய்தார். கொலை வழக்கில் பிரதீப் அவரது தந்தை சிவகுமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே போலீசாரிடம் எங்களது குடும்பத்தை அவதூறாக பேசியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக இருவரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

News December 15, 2025

தேனியில் மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

image

போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (32). இவா் போடி மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு கடுமையாக அவதிப்பட்டுள்ளார். இதனால், மனமுடைந்த ஜெயச்சந்திரன் நேற்று (டிச.14) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News December 15, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (14.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!