News August 17, 2024
சிறப்பு தொழில் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) காரைக்குடி கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் முகாம் வருகின்ற 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடைபெறவுள்ளது. மேலும் 04565-232210 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(ஆக.17) தெரிவித்துள்ளார்.
Similar News
News October 23, 2025
சிவகங்கை: கம்மியான விலையில் பைக் வேண்டுமா..!

சிவகங்கை, மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 39 டூவீலர்கள் எஸ் பி சிவப்பிரசாத் தலைமையில் அக்டோபர் 25 அன்று காலை 10 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்ட பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் தங்களது ஆதார் அட்டை நகலுடன் கூடுதல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
News October 22, 2025
கனமழை காரணமாக உயிரிழப்பு அல்லது சேதம் எதுவுமில்லை

சிவகங்கை மாவட்டத்தில் 21.10.2025 முதல் 22.10.2025 வரை மொத்தம் 617.20 மிமீ மழை பதிவாகியுள்ளது (சராசரி 68.58 மிமீ). திருப்புவனம் அதிகபட்சமாக 93.60 மிமீ, மானாமதுரை குறைந்தபட்சமாக 36.40 மிமீ மழை பெற்றது. மாவட்டம் முழுவதும் கனமழை பதிவாகியுள்ள நிலையில், மனித இழப்பு, காயம், ஆடு-மாடு இழப்பு அல்லது வீட்டு சேதம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
News October 22, 2025
சிவகங்கை அருகே ஒருவர் வெட்டி படுகொலை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆர்ச் முன்பாக கண்ணமங்கலத்தைச் சேர்ந்த சங்கர் (29) என்பவர் மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இளையான்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.