News June 26, 2024

சிறப்பு கடன் வழங்கும் முகாம்

image

தென்காசி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு கடன் வழங்கும் முகாம் ஜூன் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது என இணைப்பதிவாளர் நரசிம்மன் இன்று கூறியுள்ளார். அதன்படி, கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (ம) நில வள வங்கிகள் மூலம் பயிர் கடன், நகை கடன், சுய உதவி குழு கடன் வழங்கப்படுகிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News November 25, 2025

தோரணமலை முருகனுக்கு இன்று சிறப்பு அலங்காரம்

image

தென்காசி கடையம் செல்லும் சாலை மாதாபுரம் அருகே அமைந்த தோரணமலை முருகன் கோவிலில் இன்று காலை வல்லவ விநாயகர் தோரணமலை முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து மழை அடிவார கீழ் பகுதியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

News November 25, 2025

தென்காசி: தெரியாத நம்பர் -ல இருந்து போன் வருதா??

image

தென்காசி மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0(Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க போன் -ல இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உங்க போன் நம்பர் பதிவு செய்யுங்க. இனி உங்க போனுக்கு தேவை இல்லாத அழைப்புகள் , மெசேஜ் வராது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 25, 2025

தென்காசி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!