News April 8, 2025
சிப்காட் அமைக்க விளைநிலத்தை கையகப்படுத்தக் கூடாது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவேரி வைகை குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அர்ஜுனன் மற்றும் மாவட்ட தலைவர் ராம் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் காரியாபட்டி அருகே சிப்காட் அமைக்க விளைநிலத்தை கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனர்.
Similar News
News November 28, 2025
விருதுநகரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? – விளக்கம்

டிட்வா புயல் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவ.29) விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இது தவறான தகவல் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மழை நிலவரத்தை பொறுத்து மாவட்ட நிர்வாகேமே விடுமுறை அறிவிக்கும் என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
News November 28, 2025
BREAKING விருதுநகரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டிட்வா புயல், சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவ.29) விடுமுறை அறிவித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. SHARE IT
News November 28, 2025
BREAKING விருதுநகரையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

அருப்புக்கோட்டை அருகே 2022 இல் பாலவநத்தம் – கோபாலபுரம் சாலையில் உறவினரை தாக்கி 43 வயது பெண்னை சிறுவன் உட்பட 7 பேர் காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து செயினை பறித்து சென்ற சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியது. இதில் சிறுவன் மீதான வழக்கு இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் மற்ற 6 பேருக்கும் ஆயுட்கால சிறை தண்டனை விதித்து ஸ்ரீவி விரைவு மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


