News April 8, 2025

சிப்காட் அமைக்க விளைநிலத்தை கையகப்படுத்தக் கூடாது

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவேரி வைகை குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அர்ஜுனன் மற்றும் மாவட்ட தலைவர் ராம் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் காரியாபட்டி அருகே சிப்காட் அமைக்க விளைநிலத்தை கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனர்.

Similar News

News November 21, 2025

விருதுநகர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

வங்கக்கடலில் நாளை (நவ. 22) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெற உள்ளதால் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை (நவ. 22) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கால பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News November 21, 2025

விருதுநகர்: 5,810 காலியிடங்கள்.. கடைசி வாய்ப்பு! APPLY

image

விருதுநகர் மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கு நவ.20 கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<> இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400. டிகிரி முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 21, 2025

விருதுநகரில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, 21.11.2025 இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!