News December 5, 2024
சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற இடைக்கால தடை

மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்காக சின்ன உடைப்பு கிராம மக்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பதிலாக மறுவாழ்வு, மறுகுடியமர்வு வசதிகளை செய்து தர உத்தரவிட கோரி யர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் சின்ன உடைப்பு பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
பள்ளி மாணவி சுருண்டு விழுந்து பலி

மதுரை அருகே செக்கானூரணியை சேர்ந்தவர் ஆஷிகா(14). இவர்
செக்கானூரணி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கல்லீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 5, 2025
மதுரையில் நாளை மின்தடை அறிவிப்பு

மதுரை பைக்காரா, பசுமலை பகுதியில் நாளை (நவ.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பழங்காநத்தம், அக்ரஹாரம், பசும்பொன் நகர், பஸ் ஸ்டாண்ட் முதல் 6 தெரு வரை மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன்சேர்வைநகர், தேவி நகர், கிருஷ்ணாநகர், காயத்ரிதெரு, துரைசாமிநகர், கோவலன்நகர், அழகப்பன்நகர், திருவள்ளுவர்நகர், பிபிகே ரோடு, முத்துப்பட்டி, பைக்காரா, பசுமலை பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
மதுரை: இனி RTO ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்.!

மதுரை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<


