News December 5, 2024
சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற இடைக்கால தடை

மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்காக சின்ன உடைப்பு கிராம மக்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பதிலாக மறுவாழ்வு, மறுகுடியமர்வு வசதிகளை செய்து தர உத்தரவிட கோரி யர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் சின்ன உடைப்பு பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 17, 2025
மதுரை: மதுவால் இளைஞர் தற்கொலை

மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊமெச்சிக்குளம் காந்தி கிரவுண்ட் தெருவில் வசித்து வந்தவர் அருண்பாண்டி (25). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவரை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த அருண்பாண்டி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 17, 2025
மதுரை: போலீஸ் கடும் எச்சரிக்கை

ஒருவரது தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66ன் படி, அனுமதியின்றி புகைப்படங்களை பயன்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 3 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும், சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News December 16, 2025
JUSTIN: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விசாரணைக்கு தடையில்லை

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பான வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதிக்க மறுத்துவிட்டது. தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றும், வழக்கு விசாரணை நாளையும் தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


