News December 5, 2024

சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற இடைக்கால தடை

image

மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்காக சின்ன உடைப்பு கிராம மக்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பதிலாக மறுவாழ்வு, மறுகுடியமர்வு வசதிகளை செய்து தர உத்தரவிட கோரி யர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் சின்ன உடைப்பு பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Similar News

News February 23, 2026

மதுரை மக்களே; நீங்க தெரிந்திருக்க வேண்டியவை

image

மாவட்ட ஆட்சியர் – பிரவீன் குமார் – 0452-2531110

போலீஸ் கமிஷனர் – லோகநாதன் – 0452-2350777

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – அரவிந்த் – 0452-2539466

மாநகராட்சி கமிஷனர் – சித்ரா விஜயன் – 0452 2321121

மாவட்ட வருவாய் அலுவலர் – அன்பழகன் – 0452-2532106

இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்யுங்க.
கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும். (அவசியத்திற்கு மட்டும் பயன்படுத்தவும்)

News February 23, 2026

மதுரை: மகன் இறந்த துக்கம் தாக்காமல் தாய் மரணம்

image

ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சுந்தரம் மனைவி சரஸ்வதி(50). கணவரை இழந்த இவர் கட்டட வேலை பார்த்த போது பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இதில் மனமுடைந்த அவர் மகன் முத்துப்பாண்டி, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறுதி சடங்கை உறவினர்கள் முடித்து விட்டு வீட்டிற்கு இன்று வந்த போது, மகன் இறந்த துக்கத்தில் சரஸ்வதியும் உயிரிழந்தார். அவனியாபுரம் போலீசார் விசாரணை.

News February 23, 2026

மாட்டுத்தாவணி: பிரியாணி கடையில் தூக்கிட்டு தற்கொலை

image

நேபாளம், ஜனக்பூரை சேர்ந்தவர் நாகேந்திர சஹானி மகன் சுதிர் சஹானி(21). இவர் மாட்டுத்தாவணி அருகே உள்ள பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் மதுரை பெண் ஒருவரை காதலித்ததை அறிந்த சஹானியின் பெற்றோர் அதனை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று தான் வேலை பாத்த பிரியாணி கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோ.புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!