News December 5, 2024

சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற இடைக்கால தடை

image

மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்காக சின்ன உடைப்பு கிராம மக்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பதிலாக மறுவாழ்வு, மறுகுடியமர்வு வசதிகளை செய்து தர உத்தரவிட கோரி யர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் சின்ன உடைப்பு பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Similar News

News January 6, 2026

மதுரை: அரளி விதை குடித்து மீண்டவர் மது அருந்தியதால் பலி

image

வாடிப்பட்டி திருவேடகத்தை சேர்ந்தவர் முத்துவேல் மகன் கார்த்தியோகன்(23). இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். பெற்றோருடன் வசித்தவர் தொடர்ந்து மது அருந்தியதை அவர்கள் கண்டிக்கவே, அரளி விதையை குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய இவர் மீண்டும் மது அருந்த, நுரை தள்ளி மயங்கி விழுந்தார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 6, 2026

மதுரை: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

மதுரை மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம்

image

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் தீபம் ஏற்றலாம் என நீதிபதிகள் கேகே ராமகிருஷ்ணன், ஜெயசந்திரன் அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

error: Content is protected !!